
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமை நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
சென்னை மிட்சுபா சிகால் நிறுவன அதிகாரிகள் பங்கேற்று கல்லுாரி மாணவ, மாணவிகள் 28 பேரை தேர்வு செய்து பணி நியமன ஆணையை வழங்கினர்.
கல்லுாரி முதல்வர் சங்கர், துணை முதல்வர் ஜெகன், வேலை வாய்ப்பு அதிகாரி மனோ சந்தர் மற்றும் துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.