ADDED : பிப் 19, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றினார். கல்லுாரி முதல்வர் டாக்டர் வெங்கடேஷ் வரவேற்றார். சென்னை வீல்ஸ் இண்டியா லிமிடெட் கம்பெனியைச் சேர்ந்த மனித வள மேலாளர் புவனேஸ்வர், லட்சுமணன் ஆகியோர் மாணவர்களிடம் நேர்காணல் நடத்தி 74 பேரை தேர்வு செய்து பணி நியமன ஆணை வழங்கினர்.
கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலர் சரண்குமார் நன்றி கூறினார்.

