/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி சாவு
/
மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி சாவு
ADDED : அக் 31, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி:  விக்கிரவாண்டி அருகே கூலித்தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சனுாரை சேர்ந்தவர் வீரமணி, 48; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் தனது மாட்டை மேய்ச்சலுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் கட்ட சென்றார். அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் விஷால், அவரை அங்கு தேடி சென்று பார்த்த போது மயங்கி கிடந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கஞ்சனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

