ADDED : நவ 10, 2025 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் மணல் கடத்திய பதிவெண் இல்லாத மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் வழுதரெட்டி, சுப்ரமணிய நகரில் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பதிவெண் இல்லாமல் மணல் கடத்தி வந்த மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

