/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை விரிவாக்க பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சாலை விரிவாக்க பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : நவ 06, 2025 11:40 PM

செஞ்சி: தென்புதுப்பட்டு கொம்மேடு விரிவாக்க பணி துவங்கியது.
செஞ்சி அடுத்த தென்புதுப்பட்டு, கொம்மேடு கிராமம் வழியாக தளவானுார் கிராமத்திற்கு செல்லும் 3 கி.மீ., துார தார் சாலையை ரூ.2.60 கோடி மதிப்பில் 3.75 மீட்டர் அகலத்தில் இருந்து 5.50 மீட்டர் அகல சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி துவங்கியது
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அக்பர் அலி முன்னிலை வகித்தார்.
ஊராட்சித் தலைவர் சிவக்குமார் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மேல்மலையனுார் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் விஷ்ணு பிரியா, பாலாஜி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தனசேகரன், முன்னாள் ஊராட்சி தலைவர் சம்பத்குமார், துணை தலைவர் வேலுசாமி, தி.மு.க., ஒன்றிய பிரதிநிதிகள் அய்யாதுரை, கோடீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

