sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ராம்பாக்கத்தில் குரங்குகள் அட்டகாசம்

/

ராம்பாக்கத்தில் குரங்குகள் அட்டகாசம்

ராம்பாக்கத்தில் குரங்குகள் அட்டகாசம்

ராம்பாக்கத்தில் குரங்குகள் அட்டகாசம்


ADDED : நவ 07, 2025 11:18 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அடுத்த ராம்பாக்கத்தில் அதிகரித்துள்ள குரங்குகளை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வளவனுார் அடுத்த ராம்பாக்கம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிகின்றன. பகல் நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து, பொருள்களை எடுத்து சேதப்படுத்துகிறது.

மாடியில் காய வைக்கும் தானியங்கள், பொருள்களை சாப்பிட்டு வருவதோடு, விரட்டும் பொது மக்களையும் கடிப்பதற்கு பாய்ந்து அச்சுறுத்தி, அட்டகாசம் செய்து வருவதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அதிகளவில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள், பி.டி.ஓ., அலுவலகம் மற்றும் மக்களுடன் முதல்வர் முகாமிலும் புகார் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி வனத்துறை ஊழியர்கள் வந்து, 12 குரங்குகளை பிடித்து அகற்றினர்.

மீதமுள்ள 75க்கும் மேற்பட்ட குரங்குகள், வீடுகள், அரசு பள்ளிகளில் புகுந்து அட்டகாசம் செய்வதால், அதனையும் பிடித்து அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us