sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நந்தன் கால்வாய் சீரமைக்கும் பணி பனமலை ஏரிக்கு நீர் கொண்டு வர தீவிரம்

/

நந்தன் கால்வாய் சீரமைக்கும் பணி பனமலை ஏரிக்கு நீர் கொண்டு வர தீவிரம்

நந்தன் கால்வாய் சீரமைக்கும் பணி பனமலை ஏரிக்கு நீர் கொண்டு வர தீவிரம்

நந்தன் கால்வாய் சீரமைக்கும் பணி பனமலை ஏரிக்கு நீர் கொண்டு வர தீவிரம்


ADDED : நவ 13, 2024 05:03 AM

Google News

ADDED : நவ 13, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : வடகிழக்கு பருவ மழையின் போது கிடைக்கும் மழை நீரை பனமலை ஏரிக்கு நந்தன் கால்வாய் மூலம் கொண்டு செல்ல பொதுப்பணித்துறையினர் தடைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அனந்தபுரம் அடுத்துள்ள பனமலை ஏரிக்கு தண்ணீர் வருவதற்கான நந்தன் கால்வாய் அமைத்துள்ளனர். இதில் பல இடங்களில் செடி கொடிகள் முளைத்தும், மண் மேடுகள் ஏற்பட்டும் ஏரிக்கு தண்ணீர் வருவதில் தடைகள் உள்ளன. இதையடுத்து கடந்த 6ம் தேதி பெண்ணையாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் தமிழ்ச்செல்வன் நந்தன் கால்வாய் துவங்கும் கீரனுார் அணைக்கட்டில் இருந்து 30 கி.மீ., துாரத்தில் உள்ள கணக்கன்குப்பம் வரை கால்வாயை பார்வையிட்டார்.

இந்த ஆய்வுக்கு பிறகு தேவதானம்பேட்டையில் துவங்கி பழயை நந்தன் கால்வாய் துவங்கும் கணக்கன்குப்பம் வரை தண்ணீர் செல்வதற்கு தடைகள் அதிகமாக உள்ளதால், அந்த 4.50 கி.மீ., துாரத்திற்கான கால்வாயை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் துார்வாரி செப்பணிட பொதுப்பணித்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 9ம் தேதி முதல் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் கணக்கன்குப்பத்தில் துவங்கி தேவதானம்பேட்டை வரையிலான நந்தன் கால்வாயில் துார்வாரி, செடி கொடிகளை அகற்றி செப்பனிடும் பணியை பொதுப்பணித்துறையினர் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாகி வருவதால் இந்த பருவமழையின் மூலம் கிடைக்கும் மழை வெள்ளத்தை பனமலை ஏரிக்கு கொண்டு செல்வதற்காக பொதுப்பணித்துறையினர் இடைவிடாமல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us