/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் தேசிய மாணவர் படை துவக்கம்
/
அரசு கல்லுாரியில் தேசிய மாணவர் படை துவக்கம்
ADDED : நவ 02, 2025 10:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில் தேசிய மாணவர் படை துவக்க விழா நடந்தது.
முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு 6 பட்டாளியன் கமாண்டிங் அலுவலர் கர்னல் சக்கரவர்த்தி, தேசிய மாணவர் படையை துவக்கி வைத்து, தேசிய மாணவர் படை குறித்தும், அதன் எதிர்கால பணிகள் குறித்தும் விளக்கினார்.
விழாவில், மாணவியர் பயிற்சியாளர் தேவசேனா, அண்ணா பொறியியல் கல்லுாரி பேராசிரியர் ஞானமூர்த்தி, பேராசிரியர்கள், முன்னாள் தேசிய மாணவர் படை மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

