/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொன்பத்தி ஊராட்சியில் என்.எஸ்.எஸ். முகாம்
/
பொன்பத்தி ஊராட்சியில் என்.எஸ்.எஸ். முகாம்
ADDED : செப் 29, 2024 04:56 AM

செஞ்சி : பொன்பத்தி ஊராட்சியில் என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழா நடந்தது.
செஞ்சி அடுத்த பொன்பத்தி ஊராட்சியில் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்களின் 7 நாள் சிறப்பு முகாம் துவக்க விழா நேற்று நடந்தது. உதவி தலைமையாசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் ஏழுமலை வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் முகாமை துவக்கி வைத்து பேசினார்.
ஊராட்சி தலைவர் அனுசுயா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், ஆசிரியர்கள் ரஞ்சித், பாண்டியராஜன், ,அசோக், யோகா பேராசிரியர் பாலு மற்றும் கிராம பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.