நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த திருமுண்டீச்சரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 72; இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதியடைந்து வந்தார்.
இதனால், மனமுடைந்த அவர், நேற்று பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். குடும்பத்தார் அவரை, திருவெண்ணெய்நல்லுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் பெருமாள் இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

