ADDED : நவ 03, 2024 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் ரயில் நிலையத்தில் முதியவர் ரயிலில் சிக்கி இறந்தார்.
திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்தவர் தேவராஜ், 67; மாற்றுத்திறனாளி.
இவர் நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரயில் பாதையை கடக்க முயன்றார்.
அப்போது, விழுப்புரத்திலிருந்து மேல்மருவத்துார் சென்ற யூனிட் ரயில் மோதியதில் தேவராஜ் இறந்தார்.
ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.