/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
கழிவுநீர் தேங்கிய பழனிவேல் நகர் நகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி
/
கழிவுநீர் தேங்கிய பழனிவேல் நகர் நகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி
கழிவுநீர் தேங்கிய பழனிவேல் நகர் நகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி
கழிவுநீர் தேங்கிய பழனிவேல் நகர் நகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி
PUBLISHED ON : பிப் 08, 2026 05:20 AM

விழுப்புரம்: 'தினமலர்' செய்தி எதிரொலியால், விழுப்புரம் கே.கே., ரோடு பழனிவேல் நகரில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கியதை சீரமைக்கும் பணிகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு சீரமைத்தனர்.
விழுப்புரம் கே.கே., ரோடு 22வது வார்டு பழனிவேல் நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலையில், கடந்த ஒரு மாத காலமாக பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்து குளமாக தேங்கியது.
இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் பாதாள சாக்கடை கசிவு ஏற்பட்ட குழாயை, மாற்றியதோடு, உடைக்கப்பட்ட தரை தளத்தை சிமென்ட்டால் பூசி, துப்புரவு பணியாளர்கள் மூலம் பிளீச்சிங் பவுடர் கொட்டி துாய்மைபடுத்தினர்.

