ADDED : டிச 13, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் தாலுகா அலுவகத்தில் மா.கம்யூ., சார்பில் புயல் நிவராணம் வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
வட்ட செயலாளர் ஹரிஹரகுமார் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் மேல்மலையனுார் தாலுகா புயல் பாதிப்புக்குள்ளான தாலுகாவாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து, மண்டல துணை தாசில்தார் சித்தார்த்திடம் மனு வழங்கினர்.
மாவட்டக்குழு எழில்ராஜா, இலக்கிய பாரதி, வட்டக்குழு வெங்கிடபதி, சுரேஷ், கார்த்திகேயன், சதீஷ்குமார், கிளை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

