/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இளம் பெண் கடத்தல் போலீஸ் விசாரணை
/
இளம் பெண் கடத்தல் போலீஸ் விசாரணை
ADDED : பிப் 01, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே இளம் பெண்ணைக் கடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த கொண்டங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம், 60; இவரது மகள் மணிமேகலை, 24; பி.எஸ்சி., படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரை கடந்த 31ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பெண்ணின் தாய் கஸ்துாரி, தனது மகளை வெங்கமூரைச் சேர்ந்த குமரவேல், 31; காரில் கடத்தி சென்றதாக அளித்த புகாரின் பேரில், காணை போலீசார், குமரவேல் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

