/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை
/
நகை, பணம் திருட்டு போலீஸ் விசாரணை
ADDED : ஆக 21, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே வீடு புகுந்து 3 சவரன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேல்மலையனுார் அடுத்த அடுக்குபாசி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மனைவி அஞ்சலை, 55; இவர், கடந்த 19ம் தேதி காலை வீட்டை பூட்டிக்கொண்டு அதே ஊரில் நுாறு நாள் வேலைக்கு சென்றவர் மதியம் வந்து பார்த்தபோது, வீடு பூட்டியிருந்த நிலையில், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 சவரன் நகை, 15 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.