sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அதிகரிக்கும் கஞ்சா விற்பனை மவுனம் காக்கும் போலீசார்

/

அதிகரிக்கும் கஞ்சா விற்பனை மவுனம் காக்கும் போலீசார்

அதிகரிக்கும் கஞ்சா விற்பனை மவுனம் காக்கும் போலீசார்

அதிகரிக்கும் கஞ்சா விற்பனை மவுனம் காக்கும் போலீசார்


ADDED : அக் 01, 2024 07:15 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரோவில் பகுதியில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

ஆரோவில் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆரோவில் மற்றும் சுற்றியுள்ள இடைஞ்சாவடி, குயிலாப்பாளையம், பொம்மையார்பாளையம், கோட்டக்கரை, சின்ன முதலியார்சாவடி, சின்ன கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கெஸ்ட் அவுஸ்கள் உள்ளன. இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள், கஞ்சா போதையில் திரிவது அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை, கொடைக்கானல், பெங்களூரு பகுதிகளில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்யும் புரோக்கர்கள், சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து, 'கல்லா' கட்டி வருகின்றனர்.

பழைய வழக்குகளில் ஆஜராகாமல் இருக்கும் நபர்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டும், தனிப்படை போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டு கொள்வதே இல்லை. இதனால் கஞ்சா வியாபாரிகளின் காட்டில் அடை மழை பெய்து வருகிறது. ஆரோவில் பகுதியில் கஞ்சா விற்பனை குறைந்துள்ளதாக, உயரதிகாரிகளுக்கு கீழ்மட்டத்தில் உள்ள போலீசார் ரிப்போர்ட் அளித்து விடுகின்றனர்.

இதையே காரணமாக வைத்துக் கொண்டு, கஞ்சா விற்பனை ஜோராக நடக்கிறது. இதை தடுக்க வேண்டிய போலீசாரும், வியாபாரிகள் குறித்த சரியான தகவல் திரட்ட முடியாமல் திணறி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us