sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில் கடத்தியவரிடம் பணம் வசூல் போலீஸ் ஏட்டுகள் 3 பேர் 'சஸ்பெண்ட்'

/

மதுபாட்டில் கடத்தியவரிடம் பணம் வசூல் போலீஸ் ஏட்டுகள் 3 பேர் 'சஸ்பெண்ட்'

மதுபாட்டில் கடத்தியவரிடம் பணம் வசூல் போலீஸ் ஏட்டுகள் 3 பேர் 'சஸ்பெண்ட்'

மதுபாட்டில் கடத்தியவரிடம் பணம் வசூல் போலீஸ் ஏட்டுகள் 3 பேர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஜன 12, 2025 05:18 AM

Google News

ADDED : ஜன 12, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : மதுபாட்டில்கள் கடத்திச் சென்ற நபர் மீது வழக்கு பதியாமல் இருக்க, பணம் வசூலித்து, விடுவித்த மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஏட்டுகள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டுகளாக பணியாற்றி வரும் அழகப்பன், காமராஜ் மற்றும் செஞ்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலைய ஏட்டு மாதவன் ஆகியோர், கடந்த சில தினங்களுக்கு முன், கண்டமங்கலம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பைக்கில் வந்த, வேலுார் மாவட்டம், ஆரணியை சேர்ந்த ஒரு நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் 10 மதுபாட்டில்களை வைத்திருந்ததால், சட்டப்படி வழக்குப் பதிந்து கைது செய்யப் போவதாக போலீசார் கூறினர்.

அந்த நபர், தனது நண்பர்களுக்கு கொடுப்பதற்காக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கிச் செல்வதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, அவரிடம் போலீசார் பேரம் பேசி ரூ.4,500 பணத்தையும், மதுபாட்டில்களையும் வாங்கியுள்ளனர். மேலும், கூடுதலாக பணம் தர மறுத்தால் வழக்குப்பதிந்து கைது நடவடிக்கை எடுப்பதாக மிரட்டி உள்ளனர். தன்னிடம் வேறு பணம் இல்லை என்று கூறியதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யாமல், போலீசார் அனுப்பி விட்டனர்.

இது குறித்த தகவல், விழுப்புரம் எஸ்.பி., கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து மதுவிலக்கு போலீஸ் ஏட்டுகள் அழகப்பன், காமராஜ், மாதவன் ஆகிய மூன்று பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கையாக, 'சஸ்பெண்ட்' செய்து எஸ்பி., சரவணன் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us