sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வழிப்பறி வாலிபர் கைது போலீசார் அதிரடி

/

வழிப்பறி வாலிபர் கைது போலீசார் அதிரடி

வழிப்பறி வாலிபர் கைது போலீசார் அதிரடி

வழிப்பறி வாலிபர் கைது போலீசார் அதிரடி


ADDED : ஜன 15, 2025 12:11 AM

Google News

ADDED : ஜன 15, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்டத்தில், விழுப்புரம், வளவனுார், கண்டமங்கலம் பகுதியில் கடந்த சில மாதங்களாக தனிமையில் இருந்த பெண்ணை தாக்கி நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தது. இது தொடர்பாக, விழுப்புரம் தாலுகா, வளவனுார், கண்டமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு பதிந்து, வழிப்பறி கும்பலை போலீசார் தேடி வந்தனர்.

இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், செல்வநாயகம், சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கபாண்டியன், கவுதமன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து, வழிப்பறி கும்பலலை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை விழுப்புரம் அருகே கோலியனுார் கூட்ரோடு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படி பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அவர், விழுப்புரம் அடுத்த வி.அகரத்தை சேர்ந்த ஏழுமலை மகன் ஜெயக்குமார், 20; என்பதும், மாவட்டத்தில் 5 இடங்களில் நடந்த வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் தெரிந்தது. இதனையடுத்து, ஜெயக்குமாரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5 சவரன் நகைகள் மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us