sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு

/

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு


ADDED : ஆக 03, 2025 04:46 AM

Google News

ADDED : ஆக 03, 2025 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் கே.கே.,சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், குடியிருப்புகள் மிகுந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் கடைகளுக்கு முன் சாலையை ஆக்கிரமித்து நிரந்தர கொட்டகை போட்டு பலர் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நீண்டகால பிரச்னைக்கு தீர்வு காண நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றிக் கொள்ளாததால், நேற்று காலை 11:00 மணிக்கு நகராட்சி கமிஷனர் வசந்தி தலைமையில், நகரமைப்பு அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி., இயந்திர உதவியுடன் நேருஜி சாலை சந்திப்பிலிருந்து கே.கே., சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு கொட்டகைகளை அகற்றினர்.

அப்போது, வணிகர் சங்கத்தினர் திரண்டு, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுத்து நிறுத்தி, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2 மாதங்களுக்கு முன் 'நோட்டீஸ்' கொடுத்தனர். தற்போது முன்னறிவிப்பின்றி கடைகளுக்கு முன் உள் கொட்டகைகள், முகப்பு விளம்பர போர்டுகளை இடித்த அகற்றுகின்றனர். கடைக்காரர்களே முகப்பு ஆக்கிரமிப்பு ெஷட்டுகளை அகற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்' என்றனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'கோர்ட் வழிகாட்டுதலின்பேரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கிறது. பல நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகரித்து வருவதால், முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியாக வேண்டும்' என்றனர்.

இருப்பினும், கே.கே.சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பெயரவில் மட்டுமே நடந்தது.






      Dinamalar
      Follow us