sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாலை ஒப்பந்த நிறுவனத்தினர் இடத்தை காலி செய்ய நெருக்கடி

/

சாலை ஒப்பந்த நிறுவனத்தினர் இடத்தை காலி செய்ய நெருக்கடி

சாலை ஒப்பந்த நிறுவனத்தினர் இடத்தை காலி செய்ய நெருக்கடி

சாலை ஒப்பந்த நிறுவனத்தினர் இடத்தை காலி செய்ய நெருக்கடி


ADDED : நவ 25, 2024 11:32 PM

Google News

ADDED : நவ 25, 2024 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் அருகே நான்கு வழிச்சாலை பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர், தங்கள் பிளாண்ட்டை காலி செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

விழுப்புரம்-புதுச்சேரி புதிய நான்கு வழிச்சாலை திட்டப் பணிகளை, மத்திய பிரதேசத்தை சேர்ந்த திலிப் பில்டுகான் தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் மேற்கொண்டுள்ளனர். இந்த நிறுவனத்தினர், வளவனூர் அருகே தனியார் நிலத்தை ஒப்பந்தம் எடுத்து, அதில் தங்கள் பிளாண்ட் அமைத்து, சாலை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

தற்போது சாலை பணிகள் முடிந்த நிலையில், அந்த ஒப்பந்த தனியார் நிலத்தை காலி செய்வதாக நிறுவனத்தினர் முடிவு செய்து, அதற்கான கடிதத்தையும் நில உரிமையாளிரிடம் கொடுத்துள்ளனர்.

ஆனால், நிலத்தை ஒப்பந்தத்திற்கு விட்ட உரிமையாளர்கள் தரப்பில், இடத்தை காலி செய்வதற்கு பல நிபந்தனைகளை விதித்து நெருக்கடி கொடுப்பதாகவும், அங்குள்ள பொருள்களையும் கொண்டுசெல்லாமல் தடுப்பதாகவும், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் அதிருப்தி தெரிவித்துள்னர்.

இது குறித்து, அந்த திலிப்பில்டுகான் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: வளவனூர் அருகே தனியார் நிலத்தில், பிளாண்ட் அமைத்து, ஒப்பந்தப்படி பணிகள் மேற்கொண்டோம். பணிகள் முடிந்து, நாங்கள் இடத்தை காலி செய்கிறோம். உரிய வாடகையும் செலுத்தப்பட்டுவிட்டது.

ஆனால், அந்த இடத்தில் 1,000 லோடு மண் அடித்து நிரப்பித்தர வேண்டும், அங்கு எஞ்சியுள்ள ரூ.20 லட்சம் மதிப்பிலான, சாலை கட்டுமான பொருள்களை எடுத்துச்செல்லக்கூடாது என தடுக்கின்றனர்.

இது குறித்து, வளவனூர் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று,வேதனை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us