/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்தல் மினி வேன் பறிமுதல்
/
மணல் கடத்தல் மினி வேன் பறிமுதல்
ADDED : டிச 11, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : மணல் கடத்திய மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று பேரங்கியூர் கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்று பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தியவர்கள் போலீசை பார்த்ததும் மினி வேனை அங்கே நிறுத்திவிட்டு தப்பியோடினர். போலீசார் மினி வேனை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.