/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி
/
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி
ADDED : டிச 15, 2024 10:54 PM

திண்டிவனம்; திண்டிவனத்தில் பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி இறந்தார்.
திண்டிவனம் பூதேரி, மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். திண்டிவனம் தலைமை தபால் நிலையத்தில் போஸ்ட்மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சிவகுரு, 10; தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர், நேற்று காலை 9:30 மணியளவில் வீட்டில் கிரைண்டர் அருகே கையை உள்ளே விட்டு கோலி குண்டுகளை எடுத்துள்ளார். அப்போது, தரையில் புதைக்கப்பட்டிருந்த எர்த் கம்பியிலிருந்து லீக்கான மின்சாரம் சிவகுரு மீது பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.
உடன், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் 10:30 மணிக்கு இறந்தார். புகாரின் பேரில் திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.