sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரம் வேளாண் அலுவலகத்தில் விதைகள் பரிசோதனை அறிக்கை

/

விழுப்புரம் வேளாண் அலுவலகத்தில் விதைகள் பரிசோதனை அறிக்கை

விழுப்புரம் வேளாண் அலுவலகத்தில் விதைகள் பரிசோதனை அறிக்கை

விழுப்புரம் வேளாண் அலுவலகத்தில் விதைகள் பரிசோதனை அறிக்கை


ADDED : அக் 21, 2024 04:25 AM

Google News

ADDED : அக் 21, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில், விதைகள் பரிசோதனை செய்யப்படுகிறது.

திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில், விதைகள் பரிசோதனை செய்து ஆய்வறிக்கை வழங்கப்படுகிறது. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்யவுள்ள விதைகள் தரமானதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

எனவே, சாகுபடி செய்யப்பட உள்ள விதைக் குவியல்களில் இருந்து விதை மாதிரிகளை எடுத்து, பரிசோதனை நிலையத்தில், விதை பகுப்பாய்வு செய்து கொள்ளலாம். விதையின் முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்துாய்மை மற்றும் பிற ரகக்கலப்பு பரிசோதனை செய்யப்படுகிறது. நன்கு சுத்தமான மற்றும் தரமான விதைகளைப் பயன்படுத்துவதால், சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.

ஒரு விதை மாதிரியினை ஆய்வு செய்வதற்கு 80 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆய்வு முடிவுகள் விவசாயிகளின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும், விபரங்களுக்கு, விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us