நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை சார்பில் 'மெஷின் லேர்னிங்' தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
தகவல் தொழில் நுட்பவியல் துறை பேராசிரியர் பாரதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கணினி அறிவியல் துறைத் தலைவர் சுந்தரவடிவேலு ஆண்டறிக்கை வாசித்தார்.
புதுச்சேரி பல்கலைக் கழக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் சிவக்குமார் 'மெஷின் லேர்னிங்' தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
நிறைவாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை மாணவர்கள் பங்கேற்றனர்.
பேராசிரியர் அருண் நன்றி கூறினார்.

