/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு வட்டார பென்ஷனர் தின விழா
/
மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு வட்டார பென்ஷனர் தின விழா
மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு வட்டார பென்ஷனர் தின விழா
மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு வட்டார பென்ஷனர் தின விழா
ADDED : பிப் 23, 2026 04:15 AM

விழுப்புரம்: அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில் விக்கிரவாண்டி வட்டார கிளையின் பென்ஷனர் தின விழா நடந்தது.
விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, வட்டார கிளைத் தலைவர் சுப்பராயலு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கொண்டல், கோவிந்தன், ராமச்சந்திரன், சீத்தாரமன், மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் குப்புசாமி வரவேற்றார். பொருளாளர் செல்வராசு, துணை தலைவர் ராதாகிருஷ்ணன் வரவு செலவு அறிக்கை வாசித்தனர். மாநில துணை தலைவர் சிதம்பரம், மாவட்ட தலைவர் சிவகுருநாதன், துணை தலைவர் குகசரவணபவன், செயலாளர் சேது விவேகானந்தன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், 70 வயதைக் கடந்த நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.
70 வயதைக் கடந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ படியை மத்திய அரசுக்கு இணையாக 1000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை 2 லட்சம் ரூபாயாக மாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணைச் செயலாளர் தட்சணாமூர்த்தி நன்றி கூறினார்.

