sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிறுவனுார் ஊராட்சி பள்ளி நுாற்றாண்டு விழா

/

சிறுவனுார் ஊராட்சி பள்ளி நுாற்றாண்டு விழா

சிறுவனுார் ஊராட்சி பள்ளி நுாற்றாண்டு விழா

சிறுவனுார் ஊராட்சி பள்ளி நுாற்றாண்டு விழா


ADDED : அக் 15, 2025 11:00 PM

Google News

ADDED : அக் 15, 2025 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நுாற்றாண்டு விழா நடந்தது.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சிறுவானுாரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கடந்த 1925ம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளி துவங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து நூற்றாண்டு விழா நடந்தது.

விழாவிற்கு, ஊராட்சி தலைவர் பாரதி மோகன்ராஜ் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் மாலதி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

இப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் சிவபாலன், ஜெகநாதன், முத்துகிருஷ்ணன் மற்றும் முன்னாள் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பொய்யாமொழி, பழனிவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர், அம்பிகா உட்பட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாணிக்கம், வட்டார வள மையம் மேற்பார்வையாளர் காசிநாதன், ஆசிரியர் பயிற்றுனர் மதிவண்ணன் மற்றும் முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us