ADDED : செப் 07, 2025 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: பிரம்மதேசம் அருகே செலவுக்கு தாய் பணம் தராததால் மகன் தற்கொலை செய்து கொண்டார்.
பிரம்மதேசம் அடுத்த சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வினாயகமூர்த்தி மகன் ராஜா, 23; இவர், கடந்த 4ம் தேதி மதியம் 1.00 மணிக்கு வீட்டில் தனது தாயிடம், செலவிற்கு பணம் கேட்டுள்ளார்.
அவர் தராததால் கோபத்தில் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற ராஜா, நேற்று முன்தினம் இறந்தார். பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.