sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சொத்தை எழுதி வாங்கி கொண்டு விரட்டிய மகன்; கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தர்ணா

/

சொத்தை எழுதி வாங்கி கொண்டு விரட்டிய மகன்; கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தர்ணா

சொத்தை எழுதி வாங்கி கொண்டு விரட்டிய மகன்; கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தர்ணா

சொத்தை எழுதி வாங்கி கொண்டு விரட்டிய மகன்; கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தர்ணா


ADDED : ஆக 19, 2025 12:11 AM

Google News

ADDED : ஆக 19, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; நிலத்தையும், வீட்டையும் ஏமாற்றி எழுதிக்கொண்டு, வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்டார்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகா மேல்வாலை கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி கமலா, 75; நேற்று காலை விழுப்புரம் கலெக்டர்அலுவலகத்திற்கு மனுவுடன் வந்த அவர், கலெக்டர் கார் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது அவர் கூறுகையில், 'மேல்வாலை கிராமத்தில் வசிக்கிறேன். எனது மகன் அறிவுச்செல்வம், என்னை நன்றாக கவனித்துக் கொள்வதாக கூறி, எனது பெயரில் இருந்த நிலத்தையும், வீட்டையும் எழுதி வாங்கிக் கொண்டார்.

சொத்தை வாங்கிக்கொண்டு என்னை விரட்டி விட்டார். இது குறித்து, கிராம பஞ்சாயத்தாரிடம் முறையிட்டும் எனது மகன் என்னை கண்டுகொள்ளவில்லை.

இது குறித்து, கலெக்டர், தாசில்தாரிடமும், முதல்வருக்கும், கடந்த 5 ஆண்டுகளாக பல முறை மனு அளித்தும், பல முறை விசாரணைக்கும் அழைத்தனர். ஆனால், விசாரணைக்கு எனது மகன் ஆஜராகவில்லை. எனக்கு மிகவும் உடல் நிலை பாதித்துள்ளது.

இதனால், என்னை ஏமாற்றி எழுதி வாங்கிய, சொத்துக்கான தான செட்டில்மென்டை ரத்து செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

தொடர்ந்து கலெக்டரிடம் அவர் மனு அளித்தார். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us