/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் வரும் 5ம் தேதி மாநில மாரத்தான் ஓட்டப் பந்தயம்
/
விழுப்புரத்தில் வரும் 5ம் தேதி மாநில மாரத்தான் ஓட்டப் பந்தயம்
விழுப்புரத்தில் வரும் 5ம் தேதி மாநில மாரத்தான் ஓட்டப் பந்தயம்
விழுப்புரத்தில் வரும் 5ம் தேதி மாநில மாரத்தான் ஓட்டப் பந்தயம்
ADDED : ஜன 02, 2025 06:55 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் மாநில அளவிலான மாரத்தான் ஓட்டம், வரும் 5ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான மாரத்தான் ஓட்டம், வரும் 5ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., உள்விளையாட்டு அரங்கில், வரும் 5 ம் தேதி காலை 6:00 மணிக்கு, மாரத்தான் ஓட்டம் துவங்குகிறது. போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தி நடைபெறும் மாரத்தான் ஓட்டத்தில், 16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டமாணவ, மாணவிகளுக்கும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் தனித்தனி பிரிவாக போட்டி நடந்தது.
இதில் வெற்றி பெறுவோருக்கு, தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவர் வால்டர் தேவாரம், மாநில செயலாளர் லதா, முன்னாள் எம்.பி., டாக்டர் கவுதமசிகாமணி, கலெக்டர் பழனி ஆகியோர் பரிசு வழங்க உள்ளனர்.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் முழு உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். இப்போட்டியில் பங்கேற்கும் 16 மற்றும் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நுழைவு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ், அனைத்து பிரிவிலும் முதலில் வரக்கூடிய 50 நபர்களுக்கு டி-சர்ட், வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் பரிசு தொகைகள் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்போர், பள்ளி சான்று, ஆதார் கார்டு நகல்களுடன், விழுப்புரம் மாவட்ட தடகள சங்க செயலாளரிடம், ஜன.2ம் தேதி மாலை 5:00 மணிக்குள், நுழைவு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு 98944 22234 என்கிற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, விழுப்புரம் மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.