ADDED : செப் 16, 2025 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : அனந்தபுரம் அருகே வயிற்று வலியால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வரிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனைவி அலமேலு, 57; இவர், கடந்த 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். கடந்த 11ம் தேதி மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், விஷத் தழையை அரைத்து குடித்து மயங்கினார்.
உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று இறந்தார். அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.