sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை

/

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை


ADDED : மே 21, 2025 06:52 AM

Google News

ADDED : மே 21, 2025 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மேல்மலையனுார், திண்டிவனம், விக்கிரவாண்டி ஆகிய தாலுகாக்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் இரண்டாம் கட்ட நெல் சாகுபடி செய்துள்ளனர்.

இதன் அறுவடை சில நாட்களாக நடந்து வந்தது.

இதுவரை 50 சதவீத பயிர்கள் கூட அறுவடை முடியாத நிலையில், கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அறுவடை இயந்திரங்களை கொண்டு நெல் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. நீரில் மூழ்கிய நெற்கதிர்கள் சேதமாகி வருவதால் மகசூல் பாதியாக குறைவதுடன், நெல்லின் தரமும் குறைந்து விடும்.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us