ADDED : மார் 15, 2025 08:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்; மயிலம் அருகே பைக் மீது கார் மோதி வாலிபர் இறந்தார்.
கீழ்எடையாளம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் 38; டிரைவர். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு கூட்டேரிப்பட்டில் இருந்து கீழ் எடையாளத்திற்கு பைக்கில் சென்றார். தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த கார் பைக் மீது மோதியது. இதில், வெங்கட்ராமன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.