/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அடையாளம் தெரியாத முதியவர் சடலம்
/
அடையாளம் தெரியாத முதியவர் சடலம்
ADDED : நவ 01, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்தில் நேற்று 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் உடல்நலம் பாதித்து இறந்து கிடந்தார்.
சிந்தாமணி வி.ஏ.ஓ., சுகுணா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, இறந்த முதியவரின் சடலத்தை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். இறந்தவரின் விபரங்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.