ADDED : அக் 08, 2025 12:30 AM

விழுப்புரம்; விழுப்புரம், மத்திய மாவட்ட காங்., சார்பில், பா.ஜ., அரசை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சீனுவாசகுமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார்.
மாநில துணை தலைவர் குலாம்மொய்தீன், அகில இந்திய உறுப்பினர் ராமமூர்த்தி, மாநில செயலாளர் தயானந்தம், நிரந்தர அழைப்பாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாநில தலைவர் அழகிரி, மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, விஜயரங்கன், மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார், கவுன்சிலர்கள் சுரேஷ்ராம், முகமது இம்ரான், வட்டார தலைவர்கள் ராதா, கிருஷ்ணாந்தன், பழநி, அய்யப்பன், காமராஜ், இளைஞர் காங்., தலைவர் ஸ்ரீராம், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவர் சேகர், சமூக ஊடகப்பிரிவு தலைவர் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.