/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ள அவலம்
/
விழுப்புரத்தில் பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ள அவலம்
விழுப்புரத்தில் பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ள அவலம்
விழுப்புரத்தில் பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ள அவலம்
ADDED : நவ 12, 2025 10:36 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் புறவழிச்சாலை முத்தாம்பாளையம் கூட்ரோட்டில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இங்கு பயணிகள் பயன்பாட்டிற்காக எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
மழை, வெயில் காலங்களில் இந்த நிழற்குடையில் பொதுமக்கள் காத்திருந்து தங்கள் பகுதிகளுக்கு பஸ் ஏறி சென்றனர்.
இந்நிலையில், இந்த பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து, அதன் உள்ளே கடை வைத்துள்ளனர். இதனால், நிழற்குடையை பயன்படுத்த முடியாமல், பொதுமக்கள் வெயில் மற்றும் மழையில் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, நிழற்குடையை ஆக்கிரமித்துள்ள கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

