ADDED : நவ 12, 2024 08:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரத்தில் உடல்நிலை சரியில்லாத கூலி தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.
விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் மகன் தியாகராஜன்,35; இவர், குடிப்பழக்கத்திற்க்கு அடிமையாகி, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி அரசு மருத்துமனைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

