sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

 ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

 ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

 ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : டிச 28, 2025 05:22 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: தொடர் விடுமுறையையொட்டி, சர்வதேச நகரமான ஆரோவிலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஆரோவில் நகரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அமைதி பூங்காவாக உருவாக்கப்பட்ட ஆரோவில்லில், உருண்டை வடிவிலான மாத்திர் மந்திர் தியான மையத்தை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த, 25ம் தேதி கிறிஸ்துமஸ், வெள்ளிக்கிழமை மற்றும் சனி மற்றும் இன்று 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதையொட்டி, புதுச்சேரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், கடந்த 3 தினங்களாக ஆரோவில் பகுதிக்கு படையெடுத்தனர். விசிட்டர் சென்டர் பகுதியில் அனுமதி சீட்டு பெற்ற அவர்கள், நடை பயணமாக சென்று உருண்டை வடிவிலான மாத்திர் மந்திரியை, 'வியூ பாயிண்ட்' பகுதியில் இருந்து பார்வையிட்டனர்.

கிறிஸ்துமஸ் விழா அன்று 7,215 பேரும், நேற்று முன்தினம் 9,574 பேரும் பார்வையிட்டுள்ளனர். நேற்று மட்டும் 9000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக ஆரோவில் நிர்வாகம் தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகள் அதிகரித்ததால், இடையஞ்சாவடியில் இருந்து கோட்டக்கரை செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us