sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சம்பிரதாய குறைதீர் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு

/

சம்பிரதாய குறைதீர் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு

சம்பிரதாய குறைதீர் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு

சம்பிரதாய குறைதீர் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு


ADDED : ஜூலை 24, 2025 09:47 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 09:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரத்தில் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் தாலுகா அலுவலக கூட்டரங்கில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.

ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை வகித்தார். விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் துவங்கியதும் விவசாய பிரதிநிதிகள் கலிவரதன், முருகேசன் உள்ளிட்டோர் பேசினர். அவர்கள் 'கலெக்டர் அலுவலகத்தில் நாளை மாவட்ட அளவிலான விவசாய கூட்டம் நடக்க உள்ளது.

அதற்கு ஒரு நாளிற்கு முன்பு, கோட்ட அளவிலான கூட்டம் பெயரளவில் நடத்துவது ஏன்? செவ்வாய் கிழமைகளில் தான் கூட்டம் நடத்துவது வாடிக்கை.

வரைமுறையின்றி கூட்டத்தை நடத்துகின்றீர்கள். காலை 10:30 மணிக்கு கூட்டம் என கூறிவிட்டு, திடீரென மதியம் 12:00 மணிக்கு தொடங்கினால், எப்போது கூட்டத்தை முடிப்பது' என கேள்வி எழுப்பினர். அதற்கு அதிகாரிகள், நேரம் கிடைக்கும் போதுதான் கூட்டத்தை நடத்த முடியும் என பதில் அளித்தனர். இதனால், கோபமடைந்த விவசாயிகள், அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'விவசாயிகளை அலுவலர்கள் மதிப்பதில்லை. குறைதீர் கூட்டங்களுக்கு அனைத்து துறை அலுவலர்களும் வருவதில்லை. இன்று கூட பல துறை அலுவலர்கள் வரவில்லை. சம்பிரதாய அளவில் கூட்டம் நடத்துவதால், அதில் குறைகளை கூறி பயனில்லை என்பதால், வெளியே வந்துவிட்டோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us