/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விதிமுறை மீறிய பைக்குகள் டிராபிக் போலீசார் பறிமுதல்
/
விதிமுறை மீறிய பைக்குகள் டிராபிக் போலீசார் பறிமுதல்
விதிமுறை மீறிய பைக்குகள் டிராபிக் போலீசார் பறிமுதல்
விதிமுறை மீறிய பைக்குகள் டிராபிக் போலீசார் பறிமுதல்
ADDED : பிப் 27, 2026 04:49 AM
விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அலுவலர்களின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை சாலையின் இருபுறங்களிலும் பைக்குகள், கார்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதனால், இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வந்தது. இதையடுத்து, பெருந்தி ட்ட வளாக சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை விதித்தும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி பைக்குகள், கார்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து, விதிமுறை மீறு நிறுத்தப்பட்ட 5 பைக்குகளை டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் குமாரராஜா தலைமையிலான போலீசார் நேற்று பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும், 6 கார்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

