ADDED : அக் 26, 2024 07:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த முகாமிற்கு வேளாண் அலுவலர் ரேவதி வரவேற்றார். திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து, வானுார் வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் பேசினார்.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் வாழ்வரசி மற்றும் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சந்திரசேகர், அபிராமி ஆகியோர் செய்திருந்தனர்.