/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்குள் 'குஸ்தி' திண்டிவனம் நகரமன்ற கூட்டம் நடப்பதில் சிக்கல்
/
ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்குள் 'குஸ்தி' திண்டிவனம் நகரமன்ற கூட்டம் நடப்பதில் சிக்கல்
ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்குள் 'குஸ்தி' திண்டிவனம் நகரமன்ற கூட்டம் நடப்பதில் சிக்கல்
ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்குள் 'குஸ்தி' திண்டிவனம் நகரமன்ற கூட்டம் நடப்பதில் சிக்கல்
ADDED : செப் 30, 2025 07:53 AM
திண்டிவனம் நகர்மன்ற தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த நிர்மலா உள்ளார். மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில் 26 தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றவர்கள் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள்.
தி.மு.க., பலத்துடன் இருந்தாலும், மாவட்ட செயலாளர் மஸ்தான் கோஷ்டி, நகரமன்ற தலைவர் கோஷ்டி மற்றும் தி.மு.க., கவுன்சிலர்களுக்குள் தனித்தனி கோஷ்டி என செயல்பட்டு வருகின்றனர்.
இந்த பூசலால், திண்டிவனம் நகராட்சிக்கு வரும் கமிஷனர்கள் யாரும் ஓராண்டு கூட நிலையாக இருப்பதில்லை.
இந்தசூழ்நிலையில் கடந்த மாதம் 7ம் தேதி திண்டிவனம் நகரமன்ற கூட்டம் நடந்தது. செப்டம்பர் மாதத்திற்கு நடைபெறும் கூட்டம் மாதம் முடியும் நாள் நெருங்கிவிட்ட நிலையில் கூட்டம் நடப்பதற்கான எந்த அறிவிப்பும் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
இதனால் செப்டம்பர் மாதம் நகர மன்ற கூட்டம் நடப்பதற்கு வாய்ப்பில்லை.
கடந்த மாதம் 29ம் தேதி, இளநிலை உதவியாளருக்கும், தி.மு.க., பெண் கவுன்சிலர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், கமிஷனர் அறையில் நகர மன்ற தலைவரின் கணவர் தலைமையில் பஞ்சாயத்து நடந்தது. இதில் இளநிலை உதவியாளர் கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளர் காலில் விழுந்த விவகாரம் தொடர்பாக கடந்த 3ம் தேதி நகர மன்ற தலைவரின் கணவர், கவுன்சிலர் உள்ளிட்டவர்கள் மீது வன்கொடுமை பிரிவு தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதன் காரணமாக வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் நீண்ட நாட்களாக தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக ஐகோர்ட்டில் நகர்மன்ற தலைவரின் கணவர் உள்ளிட்ட தி.மு.க.,வினர் 5 பேர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டட 5 பேரையும் வரும் 28ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். அந்த 5 பேரும் சமீபத்தில்தான் கோர்ட் உத்தரவால் வெளியே தலை காட்டினர்.
இதுபோன்ற குழப்பத்தால் செப்டம்பர் மாதத்தில் நடைபெற வேண்டிய நகரமன்ற கூட்டம் நடைபெற வாய்ப்பில்லாமல் போனதாக கவுன்சிலர்கள் தரப்பில் கூறுகின்றனர்.