நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வளவனுார் அருகே சூதாடிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தனசிங்குபாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்கு, சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கள்ளப்பட்டு குப்பன் மகன் ஆதி,36; காசிநாதன் மகன் பலராமன்,40; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.