/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதிவேகமாக பைக் ஓட்டிய இருவர் கைது
/
அதிவேகமாக பைக் ஓட்டிய இருவர் கைது
ADDED : நவ 01, 2025 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் விஜய், புதிய பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது, திருப்பாச்சனுார் புது காலனியை சேர்ந்த ராமு, 24; மற்றும் காணையை சேர்ந்த செல்வராஜ், 21; ஆகியோர் தங்கள் பைக்கில் பொதுமக்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக, பைக்கில் சென்றது தெரியவந்தது.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ராமு, செல்வராஜை கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

