ADDED : நவ 23, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : மணல் கடத்திய மினி லோடு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் ஆனத்துார் கிராமத்தில் உள்ள மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு மினிவேனில் மணல் கடத்தியவர்கள் போலீசை பார்த்ததும் தப்பியோடினர்.
போலீசார் மணல் கடத்தி வைத்திருந்த மினி வேனை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.