ADDED : நவ 06, 2025 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மணல் கடத்தி வந்த டாடா ஏஸ் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் பஸ் ஸ்டாப் பகுதியில் திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்தவர் போலீசாரை பார்த்ததும் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிச்சென்றார்.
சந்தேகமடைந்த போலீசார் டாட்டா ஏஸ் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையெடுத்து போலீசார் டாட்டா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்து. வழக்குப்பதிந்து தப்பியோடிவரை தேடி வருகின்றனர்.

