sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரம் சரக சட்டம் ஒழுங்கு பிரச்னை டி.ஜி.பி., தலைமையில் ஆய்வு கூட்டம்

/

விழுப்புரம் சரக சட்டம் ஒழுங்கு பிரச்னை டி.ஜி.பி., தலைமையில் ஆய்வு கூட்டம்

விழுப்புரம் சரக சட்டம் ஒழுங்கு பிரச்னை டி.ஜி.பி., தலைமையில் ஆய்வு கூட்டம்

விழுப்புரம் சரக சட்டம் ஒழுங்கு பிரச்னை டி.ஜி.பி., தலைமையில் ஆய்வு கூட்டம்


ADDED : டிச 21, 2024 06:40 AM

Google News

ADDED : டிச 21, 2024 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள மாவட்ட போலீஸ் தலைமை அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங் களின் போலீஸ் துறையினருக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று காலை நடந்தது.

தமிழக டி.ஜி.பி., சங்கர்ஜிவால் ஆய்வு மேற்கொண்டார். வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ராகார்க், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷாமிட்டல், எஸ்.பி.,க்கள், விழுப்புரம் தீபக்சிவாச், கடலுார் ராஜாராம், கள்ளக்குறிச்சி ரஜத்சதுர்வேதி மற்றும் டி.எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர். அவர்களுடன் டி.ஜி.பி., கலந்தாய்வு மேற்கொண்டார்.

அப்போது, மூன்று மாவட்டங்களில் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரம், குற்ற வழக்குகளின் நிலவரங்கள், விபத்து வழக்குகள், கைது நடவடிக்கைகள், கள்ளச்சாராயம், போதை பொருள் புழக்கம், போக்குவரத்து பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்தார்.

ரவுடிகள் ஒடுக்கம், குற்ற வழக்குகளில் கைது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும், அதிகரித்து வரும் கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து, சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார். மீண்டும் மாலை ஆய்வுக் கூட்டம் நடந்தது. முன்னதாக, எஸ்.பி., அலுவலக வளாகத்தில் டி.ஜி.பி., மரக்கன்று நட்டார். கலெக்டர் பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இரவு விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள டி.ஜி.பி., இன்று நடக்கும் இரண்டாம் நாள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற் கிறார். தொடர்ந்து மூன்று மாவட்ட போலீசாரின் குறைகளை கேட்க உள்ளார்.






      Dinamalar
      Follow us