/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய குழந்தைகள் தின போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் முதல் பரிசு
/
தேசிய குழந்தைகள் தின போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் முதல் பரிசு
தேசிய குழந்தைகள் தின போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் முதல் பரிசு
தேசிய குழந்தைகள் தின போட்டியில் விழுப்புரம் மாணவர்கள் முதல் பரிசு
ADDED : நவ 29, 2024 05:00 AM
விழுப்புரம்: தேசிய அளவிலான குழந்தைகள் தினவிழா கலை போட்டியில், விழுப்புரம் அரசு சவகர் மன்ற மாணவர்கள், முதல் பரிசு பெற்றனர்.
தேசிய அளவிலான குழந்தைகள் தின விழாவையொட்டி, புதுடில்லியில் நடைபெற்ற கலைப் போட்டியில், விழுப்புரம் அரசு சவகர் மன்ற மாணவர்கள் பங்கேற்று முதல் பரிசு பெற்றனர். இக்குழுவினர், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பழனியை சந்தித்து, பாராட்டுச் சான்றிதழ் அளித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது, மாணவர்களை பாராட்டி, கலெக்டர் பழனி பேசுகையில், புதுடில்லி தேசிய பால பவனில் தேசிய அளவில் குழந்தைகள் தினவிழாவை, தேசிய மத்திய கல்வி இயக்குநர் துவக்கி வைத்தார். இதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு சவகர் மன்ற மாணவர்கள் பல்வேறு கலைப்போட்டிகளில் பங்கேற்றனர். இதில், குரலிசை பிரிவில் குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில சவகர் மன்ற மாணவர்கள் பங்கேற்றனர்.
இவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த கவிபிரியா, ஜஸ்வந்ஸ்வரன் முதலிடம் பிடித்து பாராட்டுச் சான்றிதழ் பெற்றனர்.
மேலும், பரத நாட்டிய பிரிவில் பாவனா, சிலம்பம் பிரிவில் இசையாழினி ஆகிய மாணவர்கள் பங்கேற்றதற்கான சான்றிதழ் பெற்றுள்ளனர். தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்த மாணவர்களை பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருவெண்ணெய்நல்லுார் தாசில்தார் செந்தில்குமார், விழுப்புரம் அரசு சவகர் மன்ற மாணவர்கள் திட்ட அலுவலர் மஞ்சுக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

