ADDED : ஜன 31, 2025 07:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம்; விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த பள்ளிப்புதுப்பட்டு இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் சேகர் மனைவி மல்லிகா,43; இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். சேகர் 2 ஆண்டிற்கு முன் இறந்துவிட்டார். பிள்ளைகள் அனைவரும் வெளி யூரில் வசித்து வருவதால், மல்லிகா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த 26ம் தேதி இரவு வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு துாங்கிய போது, அவரது சேலையில் தீப்பிடித்துக்கொண்டது. அதில் உடல் கருகிய மல்லிகாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.