நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், ; விழுப்புரத்தில் கூலி தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.
விழுப்புரம் அடுத்த குடுமியான்குப்பத்தைச் சேர்ந்த விசாலிங்கம் மகன் ஏழுமலை, 25; கூலி தொழிலாளி.
நேற்று காலை வீட்டிலிருந்த இவருக்கு திடீரென உடல்நலக்குறைவால், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.