ADDED : நவ 22, 2025 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கூலித் தொழிலாளி இறந்தார்.
வளவனுார் அடுத்த வி.மாத்தூர் கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் செந்தில்குமார், 47; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 20ம் தேதி, தனது பைக்கில் மாத்துாரில் இருந்து குமளம் நோக்கி வந்தார். முதலியார்குப்பம் அருகே வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

